Breaking

Thursday, June 17, 2021

மதிய உணவுக்கான அரிசி, பணம் மாணவர்களுக்கு வழங்கல்

வில்லியனுார்-கணுவாப்பேட்டை அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவிற்கான அரிசி மற்றும் ரொக்க பணத்தை தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

கொரோனாவால் அரசு பள்ளிகள் இயங்காத நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு மதிய உணவுக்கான அரிசி 12 கிலோ மற்றும் சீருடை தையல் கூலி, காய்கறிக்காக ரூ.1520 ரொக்கப் பணம் வழங்கப்படுகிறது. கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு அரிசி, ரொக்கப்பணத்தை தேனீ. ஜெயக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.

முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம், பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரி, முன்னாள் சேர்மன் பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog