Breaking

Thursday, June 10, 2021

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை? ஹனுமந்த ராவ் தகவல்

மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இறுதியிலேயே நடைபெறும் என அதன் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் கூறியுள்ளார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
அதற்கான நிலத்தை மாநில அரசு வழங்கிய போதும் சுற்றுச்சுவரை தவிர வேறு எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. புதியதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை உடனடியாக தொடங்கிடுமாறு பிரதமர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தை வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் திருப்பதியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog