கோர்ட்களில் 3,557 காலிப்பணியிடம் - ஜூலை 9 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

கோர்ட்களில் 3,557 காலிப்பணியிடம் - ஜூலை 9 வரை விண்ணப்பிக்கலாம்

கோர்ட்களில் 3.557 காலிப்பணியிடம் ஜூலை 9 வரை விண்ணப்பிக்கலாம்
நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 3,557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 9 வரை, கால அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களிலும், காலியாகவுள்ள பணியி டங்களுக்கு ஆட்களை நியமிக்க, சென்னை ஐகோர்ட் அறிவிப்பு வெளியிட்டது. அலுவலக உதவியாளர், சுகாதார பணி யாளர், தோட்டக்காரர், காவலர், இரவு காவ லர், மசால்ஜி, துப்புரவு பணியாளர் உள் பட மொத்தம், 3,557 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கோவை உட்பட பல்வேறு மாவட்ட நீதித்துறையில், பல்வேறு பதவிகளுக்கு, தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளதால், விருப்பமுள்ள மாவட்டத்தில், தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப் பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள், அந்தந்த மாவட்டத்தில் தங்கி பணியாற்ற வேண்டும்.

எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, வாய்மொழி தேர்வு அடிப்படை யில் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடங்களுக்கு, http://wwwmhc. tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல் வேறு காரணங்களால், விண்ணப்பிக்க ஜூலை 9 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews