Breaking

Saturday, May 29, 2021

குறுகிய கால மருத்துவ துணை பிரிவு பயிற்சி தொடக்கம்

தஞ்சையில் வேலை வாய்ப்புடன் கூடிய குறு கிய கால மருத்துவ துணைப்பிரிவு பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை (பயிற்சி பிரிவு) -தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் PMKVY 3.0 திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ முகாம்களில் பணிபுரிந்திட, வேலை வாய்ப்புடன் கூடிய, குறுகிய கால பயிற்சிகள், அவ சர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (அடிப்படை), பொது கடமை உதவியாளர் (ஜி.டி.ஏ), ஜி.டி.ஏ மேம்பட்ட (சிக்கலான பராமரிப்பு), ஹோம்ஹெல்த் உதவியாளர், மருத்துவ உபகரணங்கள் தொழில்நுட்ப உதவியாளர், ஃபிளெபோடோமிஸ்ட் ஆகிய தொழில் பிரிவுகளில் வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் தொலைபேசி எண்:04362-278222, மின்னஞ்சல tnjadtrg2018@gmail.com மூலம் தொடர்பு கொள்ளலாம்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog