Breaking

Thursday, May 06, 2021

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி செல்லும் போது இடைநிற்றலை தடுக்க சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டு இந்த சலுகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் சரியாக இல்லாததால் அதனை சரி பார்த்து அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. வழக்கமாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வி செல்லும் போது சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500 ஊக்கத்தொகையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.2000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog