Breaking

Saturday, May 29, 2021

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு - செய்தி வெளியீட்டு எண். 20/2021 - நாள் 29.05.2021

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூன் 8-11 வரை நடைபெறுவதாக இருந்த நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு.
ஜூன் 22-30 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகளும் ஒத்திவைப்பு.
TNPSC அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு
செய்தி வெளியீட்டு எண். 20/2021
நாள் 29.05.2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-II தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு, தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது. மேற்படி பதவிக்கான நேர்முகத் தேர்வின் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அறிவிக்கை எண் 18/2019, நாள் 29.05.2019-இல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், 2008-2019,1.உதவி மின் ஆய்வாளர் 2. உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப் பணித் துறை) மற்றும் 3. தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு (Counselling) தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். 22.06.2021 முதல் 30.06.2021 வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள். மே-2021 தள்ளி வைக்கப்படுகிறது, மேலும் முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் 20.07.2021 அன்று வெளியிடப்படும். விண்ணப்பதாரர்களின் நலன் கருதி, துறைத் தேர்வுகள், மே-2021-க்கு விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 31.07.2021 என மாற்றம் செய்யப்படுகிறது. இத்தேர்வானது ஆகஸ்டு 2021ல் நடத்தப்படும். மேற்படி தேர்வுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog