Breaking

Saturday, April 03, 2021

சுற்றுச்சூழல் விருது பெற 30 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர் கள் ஆகியோருக்கு, சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படும். இவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுக்கு, மார்ச், 19 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த கால அவகாசம் ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. Sir/ Madam. I couldn't join in this WhatsApp group. Please fix it.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog