ஓட்டுச் சாவடிகளில் மாணவர்களுக்கு பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 03, 2021

1 Comments

ஓட்டுச் சாவடிகளில் மாணவர்களுக்கு பணி

மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவ, என்.சி.சி., மாணவர்கள், தன்னார்வ பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல், 6ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு, ஓட்டுச் சாவடியில் உதவும் வகையில், தன்னார்வ பணியில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பிறப்பித்துள்ள உத்தரவு:மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டுப் பதிவு செய்ய வசதியாக, ஒவ்வொருவருடனும் தன்னார்வலர் அனுமதிக்கப்படலாம். இந்த சேவைக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படும், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., சாரண - சாரணியர் இயக்க மாணவர்களை நியமிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடுக்கு, சில பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவும் நிலையில், மாணவர்களை இதுபோன்ற பொதுவான பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என, கேட்டு கொண்டுள்ளனர்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews