தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு – புதிய ஊதிய விதி அமலில் சிக்கல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 21, 2021

Comments:0

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு – புதிய ஊதிய விதி அமலில் சிக்கல்!!

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் புதிய ஊதிய விதியை மத்திய அரசு நிறைவேற்றியிருந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக இந்த விதியை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும். எனவே சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல் - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு!!!
புதிய ஊதிய கொள்கை:
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமல்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சமயத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தற்போது கொரோனா தாக்கத்தின் போது அனைத்து நிறுவனங்களும் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த நேரத்தில் புதிய ஊதிய விதியை அமல்படுத்துவது கடினம். மேலும் இந்த புதிய ஊதிய விதிப்படி, ஊழியர்களுக்கு கிராசுட்டி, பிஎஃப் போன்றவை அதிகரித்து ஊதியம் குறைவாக இருக்கும். எனவே ஏற்கனவே ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளம்
இன்னும் சில காலத்திற்கு புதிய ஊதிய விதி அமலுக்கு வருவது சிக்கல் தான். மேலும் நிறுவனங்கள் தரப்பிலும் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews