ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல் - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 21, 2021

Comments:0

ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல் - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு!!!

சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு:
சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது. சிக்கிம் மாநிலத்தில் உள்ள மக்கள் தேவை இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அரசின் கட்டுப்பாடு விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள்:
சிக்கிம் மாநிலத்தில் நோய் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அனைத்தும் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகல்வல்களை அறிந்து கொள்ள தொடர்ந்து அரசின் உத்தரவை கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கன்டெய்னர் லாரியில் வந்த பிளஸ்2 கேள்வித்தாள் கட்டுகள்
அரசு அலுவலகங்கள்:
ஏப்ரல் 19ம் தேதி அன்று அரசு அலுவலகத்தில் இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தாஷிலிங் செயலகம் ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் வரை மட்டுமே தற்போது பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews