ஒரு வாரத்தில் 15 ஆசிரியர்களுக்கு கொரோனாதொற்று உறுதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 25, 2021

Comments:0

ஒரு வாரத்தில் 15 ஆசிரியர்களுக்கு கொரோனாதொற்று உறுதி!

திருப்பூரில் ஒரு வாரத்தில் 15 ஆசிரியருக்கு தொற்று திருப்பூர் மாவட்டத்தில், ஒரு வாரத்தில் மட் டும், 15 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய் யப்பட்டுள்ளது. செய்முறைத்தேர்வுகள் நிறைவடைந்து நேற்று முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்ற னர். ஒன்பது முதல் பிளஸ் 1 வகுப்பு வரையி லான மாணவர்களுக்கு, விடுமுறை அறிவிக்கப் பட்டபோதும், ஆன்லைன் வகுப்புகள் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
தேர்தலுக்கு பிறகு, ஆசிரியர்கள் அதிகளவில் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரத்தில், 15 ஆசிரியர் களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், ' உடல்நிலை சரி யில்லாத ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, சமீ பத்தில் இடுவம்பாளையம் பள்ளி ஆசிரியர் ஒரு வர், நோய்த்தொற்றால் உயிரிழந்தார். கற்பித்தல் செயல்பாடுகளே இல்லாத நிலையில், ஆசிரியர் களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய அவ சியமில்லை. தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்' என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews