தொடக்கக் கல்வி அதிகாரியின் பணி வரன்முறை: உத்தரவைப் பிறப்பிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு சிறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 25, 2021

Comments:0

தொடக்கக் கல்வி அதிகாரியின் பணி வரன்முறை: உத்தரவைப் பிறப்பிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு சிறை

தொடக்கக் கல்வி அதிகாரியின் பணிவரன்முறை செய்யக் கோரிய மனுவின் மீது, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிக்க நேரிடும் என உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம் CBCID விசாரணையை எதிர்த்து NTA மேல்முறையீடு!
ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியத்தில் தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய புனிதவதி என்பவா், 2008-ஆம் ஆண்டில் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், 2008 முதல் 2010-ஆம் ஆண்டு வரை கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டாா். தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிா்த்து, உயா்நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அவரது கோரிக்கையைப் பரிசீலிக்க கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
நீட் தேர்வு ஓ.எம்.ஆர் விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரம் CBCID விசாரணையை எதிர்த்து NTA மேல்முறையீடு!
இந்நிலையில், புனிதவதி 2014-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றாா். இதையடுத்து 2008-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை தன்னுடைய பணியை வரன்முறை செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வி ஆணையா், அரியலூா் தலைமைக் கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தாா். அந்த மனு மீதும் நடவடிக்கை எடுக்காததால், உயா்நீதிமன்றத்தில் அவா் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தாா். பின்னா் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கொடுத்த மனுவை பரிசீலித்து 90 நாள்களில் உரிய உத்தரவை தொடக்கக் கல்வி ஆணையா், அரியலூா் மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரி பிறப்பிக்க வேண்டும். ஒருவேளை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews