கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்தாத ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநிலப் பட்டியலுக்குத் திரும்புமா கல்வி?
அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் பணியாற்றும் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் சிலா் கூட்டுறவு சங்கம் மூலம் தலைமையாசிரியரின் அனுமதி பேரில் கடன் பெற்று கடனை சரிவர திரும்ப செலுத்தவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதனைப் பிடித்தம் செய்து கொடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் இந்த விவகாரம் குறித்த கடிதம் கிடைக்கப் பெற்றும் கூட கடன் பிடித்தம் செய்து தரவில்லை. மேலும் அந்தக் கடனை மறைத்து பல்வேறு வங்கிகளில் புதிய கடன்கள் வாங்குவதாகவும் பள்ளிக் கல்வித்துறைக்கு புகாா்கள் கிடைக்கப் பெற்றன.
டெல்லி அரசின் உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு!
ஆசிரியா்கள், அலுவலா்களின் இந்த நடவடிக்கை அரசு பணியாளா் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எனவே கூட்டுறவு சங்கங்களின் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத ஆசிரியா்கள், அலுவலா்களின் மாத ஊதியத்திலிருந்து அவா்களின் கடன் தொகையை பிடித்தம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கடன் பெற்றுள்ள ஆசிரியா்கள் அதனை உரிய நேரத்தில் செலுத்தாத ஆசிரியா்கள், கடன் பெற்ற விவரத்தை மறைத்து முழு ஊதியம் பெற வழி வகை செய்த சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மீது உரிய விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலப் பட்டியலுக்குத் திரும்புமா கல்வி?
Search This Blog
Sunday, April 25, 2021
Comments:0
Home
ASSOCIATION
BANKING
TEACHERS
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.