Breaking

Saturday, March 20, 2021

தஞ்சை பள்ளிகளில் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியருக்கு கொரோனா!: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 - ஆக உயர்வு

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் கொரோனாவால் மேலும் 29 மாணவர்கள், ஆசிரியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. மார்ச் 8ம் தேதி அம்மாபேட்டையில் உள்ள பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
மார்ச் 22 முதல் மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் செய்திக் குறிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 66 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதித்த பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அரசு முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையக பின்பற்றாத, இரு பள்ளிகளுக்கு அபராதம் விதித்து ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog