மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 09.02.2021 (செவ்வாய் கிழமை) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 08, 2021

1 Comments

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 09.02.2021 (செவ்வாய் கிழமை)

ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம்
ந.க.எண். 5021 /ஆ 3/2020 நாள். .022021
பொருள்:

ஈரோடு மாவட்டம் - மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் - மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - விவரம் அனுப்புதல் - சார்பு. மேற்காண் பொருள் சார்பாக ஈரோடு மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு (ம)தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையத்தில் 09.02.2021 (செவ்வாய் கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே அனைத்து வகை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் 10ஆம் வகுப்பு பயின்று தற்போது மேல்நிலை வகுப்பு தொடராமல் உள்ள மாணவர்களுக்கும் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் தற்போது 12ஆம் வகுப்பு பயின்று பள்ளியைவிட்டு வெளியே சென்ற மாணவர்களுக்கும் தகவல் தெரிவித்து பெரும்பான்மையான மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews