தனியார் இணையதளம் மூலம் 16,089 இளைஞர்கள் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 30, 2020

Comments:0

தனியார் இணையதளம் மூலம் 16,089 இளைஞர்கள் பதிவு செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 16,089 பேர் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 16,089 பேர் தற்போது வரை வேலை பெற்றுள்ளதாகவும் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளளார். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் அரசு தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். தொழிற்சாலை ஊழியர்கள், இளைஞர்களுக்கு சிறப்பு இரவு நேர பயிற்சி மையம் செயல்படுகிறது. கடந்த முறை, குரூப் 4 சர்வீஸ் தேர்வுக்கு இங்கு பயிற்சி பெறற்ற 21 மாணவர்கள் வெற்றி பெற்று பல துறைகளில் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு துறை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குனர் வீரராகவ ராவ் நேற்று, காஞ்சிபுரம் பயிற்சி மையத்தில் நடந்த விழாவில், நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளரிடம் கூறுகையில், தமிழக வேலைவாய்ப்புத்துறை மூலம் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வேண்டுவோர், சிறப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை எடுக்கப்பட்டது. அதில், தற்போது வரை 89,324 பேர் வேலை வேண்டி பதிவு செய்துள்ளனர். 16,089 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் வேலை அளிக்க முன்வந்துள்ளது என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews