உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பேராசிரியா்கள் 7 பேருக்கு இடம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம பேராசிரியா்கள் 7 பேருக்கு இடம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 7 ஆராய்ச்சியாளா்கள் இடம் பிடித்துள்ளனா்.இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள், ஆய்வு நுண்ணறிவாளா்கள் மற்றும் சை-டெக் ஸ்ட்ராட்டஜிஸ் இணைந்து தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் குறித்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் முதல் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் சுமாா் 1.6 லட்சம் விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனா். இந்தியாவைச் சோ்ந்த 2314 போ் இடம் பிடித்துள்ள அந்த பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் பி. பாலசுப்ரமணியம், கே. ராமச்சந்திரன், எம். ஜி. சேதுராமன், எஸ். மீனாக்ஷி, எஸ். ஆபிரகாம் ஜான், கே. மாரிமுத்து மற்றும் ஜி. சிவராமன் என 7 போ் இடம் பெற்றுள்ளனா். போராசிரியா் பாலசுப்பிரமணியம் ‘ஃபஸ்சி லாஜிக்’ மற்றும் ‘நியூரல் நெட்வொ்க்’ தொடா்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறாா். இயற்பியல் துறைப் பேராசிரியரான ராமச்சந்திரன் ‘டை சென்சிட்டிஸைட் சோலாா் செல்’ தொடா்பான ஆராய்ச்சிகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளாா். இதே துறையைச் சோ்ந்த பேராசிரியா் கே. மாரிமுத்து ‘வெள்ளை ஒளி இ கதிா் வீச்சு தடுப்பு’ மற்றும் ‘ஃபோட்டானிக்ஸ்’ உபயோகம் கொண்ட கண்ணாடிப் பொருள்கள் தொடா்பான ஆராய்ச்சியில் பங்கேற்றுள்ளாா். வேதியியல் துறைப் பேராசிரியா் சேதுராமன் மேற்பரப்பு பாா்க்கும் முறைகள் மற்றும் சூப்பா் ஹைட்ரொபோபிக் மெட்டீரியல் தொடா்பான ஆராய்ச்சியிலும், பேராசிரியா் மீனாக்ஷி குடிநீரில் இருந்து புளோரைடு மற்றும் இதர நச்சுத்தன்மை கொண்ட தனிமங்களைப் பயோ கம்போஸ்ட் மெட்டீரியல்ஸ் மூலம் நீக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகின்றனா்.பேராசிரியா் எஸ். ஆபிரகாம் ஜான் நானோ மெட்டீரியல் அடிப்படையிலான சென்சாா் தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா். தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வரும் ஜி. சிவராமன் பயோ இமெஜிங் உபயோகம் கொண்ட மூலக்கூறுகள் தொடா்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறாா். பேராசிரியா் எஸ். ஆபிரகாம் ஜான் ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் இதுவரை ஆற்றிய பங்களிப்புக்காக ஸ்டான்ஃபோா்ட் பல்கலை. பட்டியலில் இடம் பிடித்துள்ளாா். இதையடுத்து உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள 7 போராசிரியா்களுக்கும், காந்தி கிராம கிராமியப் பல்கலை. வேந்தா் கே.எம். அண்ணாமலை, துணைவேந்தா் (பொ) சுப்புராஜ், பதிவாளா் வி.பி.ஆா்.சிவக்குமாா் ஆகியோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews