கூட்டுறவு வங்கி உதவியாளர் நேர்முக தேர்வு துவங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 10, 2020

Comments:0

கூட்டுறவு வங்கி உதவியாளர் நேர்முக தேர்வு துவங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கியில், இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்முக தேர்வு, நேற்று துவங்கியது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தலைமை கூட்டுறவு சங்கங்கள், மாநில தலைமை கூட்டுறவு வங்கியில், காலியாக உள்ள, 300 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிக்கு, ஆட்களை தேர்வு செய்ய, மாநில ஆள்சேர்ப்பு நிலையம், மார்ச், 1ல் எழுத்து தேர்வு நடத்தியது. அந்த நிலையமும், கூட்டுறவு துறையின் கீழ் தான் இயங்குகிறது. ஊரடங்கால், எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்படாமலும், நேர்முக தேர்வு நடத்தப்படாமலும் இருந்தது. இந்நிலையில், எழுத்து தேர்வு முடிவு, அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், தேர்வானவர்களுக்கு, சென்னை, அண்ணா நகரில் உள்ள, நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நேர்முக தேர்வு துவங்கியது. அந்த தேர்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஒரு நாளைக்கு, 200 பேர் என்ற அடிப்படையில், நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews