அரசுப்பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த இலவச லேப்டாப் திருட்டு குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு: ஐகோர்ட் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 19, 2020

Comments:0

அரசுப்பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த இலவச லேப்டாப் திருட்டு குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு: ஐகோர்ட் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி மற்றும் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 57 இலவச லேப்டாப்கள் திருடு போயுள்ளது. திருடு போன லேப்டாப்புக்கு உரிய பணத்தை செலுத்தக் கோரும் உத்தரவை ரத்து செய்யக்கோரி, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், பிறப்பித்த உத்தரவு: அரசு வழங்கிய லேப்டாப்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு. 2 பள்ளிகளிலும், லேப்டாப் இருந்த அறைக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட காவலர்களே பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். திருடு போன லேப்டாப்களை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் கூறிவிட்டனர். திருடு போன லேப்டாப்களுக்கு தலைமை ஆசிரியர்கள் முறையே ₹5.20 லட்சம், ₹4.36 லட்சம் செலுத்த வேண்டுமென இயந்திரத்தனமாக உத்தரவிட்டுள்ளனர். எனவே, பணத்தை செலுத்த வேண்டுமென்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களிடம், மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக விசாரித்து, விளக்கத்தை பெற்று, அதன் பிறகு தகுந்த உத்தரவிட வேண்டும். அரசுப்பள்ளிகளில் லேப்டாப் திருட்டு குறித்து பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருடு போன லேப்டாப்களுக்குரிய தொகையை செலுத்த வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய லேப்டாப்கள் கிடைப்பதில்லை. ஆன்லைன் கல்வியில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. பள்ளிகளில் திருடு போகும் லேப்டாப்களை கண்டுபிடிப்பதில் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லை. எனவே, வடக்கு மற்றும் ெதன்மண்டல ஐஜிக்கள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், கல்வித்துறைக்கான ஐகோர்ட் சிறப்பு பிளீடர் ஆகியோரைக் கொண்ட ஒரு சிறப்புக்குழுவை பள்ளிக்கல்வித்துறை செயலர் 8 வாரத்திற்குள் அமைக்க வேண்டும். இக்குழு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த 2012 முதல் லேப்டாப்கள் திருடு போனது குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews