கல்வி கட்டணம் 40 சதவீதம் செலுத்த வரும், 30ம் தேதி வரை அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

கல்வி கட்டணம் 40 சதவீதம் செலுத்த வரும், 30ம் தேதி வரை அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில், 40 சதவீதத்தை செலுத்த, வரும், 30ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளுக்கு எதிராக, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும், அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளதால், கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என, கல்வி நிறுவனங்களுக்கு, 2020 ஏப்ரலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், கல்வி நிறுவனங்கள் மனுக்கள் தாக்கல் செய்தன. மனுக்களை, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். ஆகஸ்ட் மாதத்தில், 40 சதவீத கட்டணமும், வகுப்புகள் துவங்கிய பின், இரண்டு மாதங்களில், 35 சதவீத கட்டணமும் வசூலித்துக் கொள்ள, நீதிபதி அனுமதி அளித்தார்.இந்த அனுமதி, 2020 ஜூலை, 17ல், பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, கல்விக் கட்டணம் முழுவதையும் செலுத்தும்படி, கல்வி நிறுவனங்கள் வற்புறுத்துவதாக, பெற்றோரிடம் இருந்து புகார்கள் வருவதாக, நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் தீரஜ் குமார், காணொலி வாயிலாக ஆஜராகி, ''இதுவரை, 75 புகார்கள் பெறப்பட்டதில், 29 பள்ளிகள், நீதிமன்ற உத்தரவை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பள்ளிகளிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது,'' என்றார்.பெற்றோர் தரப்பில், 40 சதவீத கல்வி கட்டணத்தை செலுத்த, அவகாசத்தை நீட்டிக்கும்படி கோரப்பட்டது. இதையடுத்து, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:வெவ்வேறு பெயர்களில், கூடுதல் கட்டணத்தை பள்ளிகள் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலித்தால், நீதிமன்ற உத்தரவை அவமதிப்பது போலாகும். முதல் தவணையாக, 40 சதவீத கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம், 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகளின் பட்டியல் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, பள்ளி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறிய பள்ளிகள் மீது, அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும். விசாரணை, வரும், 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews