நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான ஆலோசனைக்கு பின் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 26, 2020

நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான ஆலோசனைக்கு பின் முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி, மேற்குவங்கம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா அரசுகள் முடிவு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான ஆலோசனைக்கு பின் முடிவு. நீட், JEE தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூட்டிய 7 முதலமைச்சர்களின் காணொலி கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை கூறியுள்ளார். கொரோனா காரணமாக நீட் மற்றும் JEE தேர்வுகளை இனியும் தள்ளி வைக்க முடியாது என, கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய தேர்வு முகமை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. இந்த நிலையில் அது குறித்து விவாதிக்க, சோனியா காந்தி நடத்திய காணொலி கூட்டத்தில் புதுச்சேரி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பஞ்சாப்,மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews