நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 29, 2020

நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் பற்றி பெற்றோர் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ' பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம். நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்க ஒரு ருபாய் கூட வசூலிக்கப்படுவதில்லை. அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கப்படுவதாலும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும். இந்தாண்டு ஒன்றாம் வகுப்பில் 1.72 லட்சம் குழந்தைகள் கூடுதலாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று இருப்பதால் செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். தனியார் பள்ளியில் இருந்தும் அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே போன்று அனைத்து மாணவர்களுக்கும் வழங்க தேவையான பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது'. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews