அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - முதல்வர் நாராயணசாமி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 21, 2020

Comments:0

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - முதல்வர் நாராயணசாமி தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது' என, முதல்வர் நாராயணசாமி கூறினார்.பட்ஜெட் தாக்கல் முடிந்த பின், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பாக அரசு கொறடா அனந்தராமன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் அரசு ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்கி வருகிறோம். பெரிய மாநிலங்களில் சம்பளத்தை குறைத்தபோதும், புதுச்சேரியில் சம்பளமும், ஓய்வூதியமும் முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அடுத்த ஜூன் வரை நிறுத்தி வைத்துள்ளது. அதனால், புதுச்சேரியிலும் அதை பின்பற்ற வேண்டியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அடுத்த ஜூன் வரை நிறுத்தி வைக்கப்படும்.நிதி நெருக்கடி காரணமாக ஓய்வு பெறுபவர்களுக்கு பணப் பலன்கள் வழங்குவது சிரமாக உள்ளது. இருந்தபோதும், பட்ஜெட் திருத்திய மதிப்பீட்டில் வழங்கப்படும்.இவ்வாறு, முதல்வர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews