செபடம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 12, 2020

Comments:0

செபடம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசு உத்தரவுப்படி செபடம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது
மத்திய அரசு உத்தரவின்படி செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடந்த இயலாது என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்த இயலாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இதன் பயனாக அதிக அளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவற்றில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நடத்த முடியவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. பல மாணவர்கள் வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசித்துவருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் முறையில் நடத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் ெகாரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பரில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்குள், செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளது. மாநில அரசுகள் முடிவெடுக்க, அதிகாரம் வழங்க வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரி யாலுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:பல்கலைகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம், செமஸ்டர் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேர்வு நடக்கவில்லை.பல்கலைகள், கல்லுாரிகள், தங்கள் வசதிக்கேற்ப தேர்வுகளை நடத்திக் கொள்ள, யு.ஜி.சி., என்ற, பல்கலை மானியக் குழு, ஏப்., 29ல் விதிமுறைகளை அறிவித்தது. புதிய விதிமுறைமீண்டும் இம்மாதம், 6ம் தேதி, புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில், நாடு முழுதும் உள்ள, அனைத்து கல்வி நிறுவனங்களும், இறுதியாண்டு மாணவர்களுக்கான, செமஸ்டர் தேர்வு களை, செப்டம்பரில் நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. மாணவர்கள், வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பதால், அவர்களால் தேர்வு மையங்களுக்கு வர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய அறிவிப்பு, பல சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது.மாணவர்கள் பலரால், இணைய வசதி பெற முடியாத சூழல் உட்பட, பல்வேறு காரணங்களால், இணைய வழி தேர்வுகளையும் நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், நோய் அறிகுறி இல்லாத, கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்நிலை, இன்னும் சில காலம் நீடிக்க வாய்ப்புள்ளது.எனவே, செப்டம்பர் மாதத்திற்குள், தேர்வுகளை நடத்த முடியாத சூழலில் உள்ளோம். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். சொந்த மதிப்பீட்டு'கேம்பஸ்' நேர்காணலில், வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பித்த மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர்.பல மாநிலங்கள், இறுதி பருவ தேர்வுகளை நடத்துவதில்லை என, முடிவு செய்துள்ளன. தொழில் வாய்ப்புகள், எதிர்கால வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு, தரம் மற்றும் கல்வி நம்பகத் தன்மையில் சமரசம் செய்யாமல், மாநிலங்களுக்கு அதன் சொந்த மதிப்பீட்டு முறைகளை உருவாக்க, சுதந்திரம் வழங்கலாம். யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., - சி.ஓ.ஏ., - பி.சி.ஐ., - என்.சி.டி.இ., தேசிய ஓட்டல் மேலாண்மை, கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான கவுன்சில் ஆகியவை, அந்தந்த மாநில அரசுகளின் முடிவுகளை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும்.இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews