மாணவர்களுக்கு தொழில்நெறி விழிப்புணர்வு பயிற்சி முகாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 09, 2020

Comments:0

மாணவர்களுக்கு தொழில்நெறி விழிப்புணர்வு பயிற்சி முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் ஆன் லைன் மூலமாக நடத்தப்படும்' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை வயிலாக இளைஞர்களிடையே திறன் குறித்த விழிப்புணர்வு வாரமாக, ஜூலை இரண்டாம் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது, ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி, இன்று, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி; நாளை, தான்தோன்றிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு உயர்கல்வி, போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலை வாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு குறித்த தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. மேலும், வரும், 10ல் ஜெயராம் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு திறன் பயிற்சி, 13ல் கரூர் வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சுயதொழில் தொடர்பாகவும், 15ல் சி.எஸ்.ஐ., தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், www.tnskill.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றிய விபரங்களை தெரிந்துகொண்டு, அந்த இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews