10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் மட்டும் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 30, 2020

Comments:0

10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் மட்டும் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஹிந்தியின் பிறப்பிடம் என சொல்லப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்
ஹிந்தி மொழியை இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கவும் மற்றும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், ஜனநாயக, அற வழியில் நடத்தப்பட்ட மாபெரும் போராட்டம் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக மக்களால் நடத்தப்பட்ட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் தமிழகம். இந்தியாவிற்கான புதிய கல்விக் கொள்கைக்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் கமிட்டி ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இந்த கமிட்டி தாக்கல் செய்த தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம் பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகள் கிளம்பியது. இதையடுத்து, மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது. எனினும், தமிழக பெற்றோர்கள் ஹிந்தி மொழியை தங்களது குழந்தைகளுக்கு திணிக்கும் முயற்சியில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒருவர் எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம் அதில் தவறேதும் இல்லை. ஆனால், கட்டாயமாக திணிக்கப்படுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் தமிழ் மொழியை எழுதுவதிலும், பேசுவதிலும் சிரமப்பட்டால் அது குறித்து பெருமையாக பேசும் நிலையும், ஹிந்தி டியூசனுக்கு கண்டிப்பாக அனுப்பும் பழக்கமும், இரண்டாவது மொழி தேர்வில் ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளை தேர்வு செய்யும் பழக்கமும் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஹிந்தி மொழியின் பிறப்படமாக அறியப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியது. சுமார் 52 லட்டம் மாணவர்கள் அம்மாநிலத்தில் பொதுத்தேர்வு எழுதிய நிலையில், அதில் 7.9 லட்சம் மாணவர்கள் ஹிந்தி மொழியில் தோல்வியடைந்துள்ளனர். அதுதவிர சுமார் 2.39 லட்சம் மாணவர்கள் ஹிந்தி தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து ஹிந்தி பாட விடைத்தாள்களை திருத்த சென்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சிறிய வார்த்தைகளை கூட சரியாக எழுத தெரியாமல் மிகவும் பிழையுடன் எழுதியுள்ளதாகவும், இதற்கு மாணவர்களின் மொழி குறித்த குறைந்த அறிவே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஹிந்தி கற்பது தங்களது எதிர்காலத்துக்கு தேவையில்லாத ஒன்று என பெரும்பாலான மாணவர்கள் கருதுவதும் இவ்வளவு பெரிய அளவில் மாணவர்கள் தோல்வியுற காரணம் என்றும் அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதுகுறுத்து தேர்வு வாரிய அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு 56 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினர். அதில், சுமார் 10 லட்சம் லட்சம் மாணவர்கள் ஹிந்தி தேர்வில் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews