தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 14, 2020

Comments:0

தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறப்பு அதிகாரி மற்றும் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டாலும் வடசென்னை பகுதிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை சென்னையில் 28,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14,614 பேர் குணமடைந்துள்ளனர். 290 பேர் உயிரிழந்துள்ளனர். 13,493 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 572 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ராயபுரத்தில் 4,500க்கும் மேற்பட்டவர்கள், தண்டையார்பேட்டையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், ராயபுரத்தில் 4821 பேர்,தண்டையார்பேட்டையில் 3781 பேர், தேனாம்பேட்டையில் 3464 பேர், கோடம்பாக்கத்தில் 3108 பேர், அண்ணாநகரில் 2781 பேர், திருவிக நகரில் 2660 பேர், அடையாரில் 1607 பேர், வளசரவாக்கத்தில் 1268 பேர், அம்பத்தூரில் 987 பேர், திருவொற்றியூரில் 1072 பேர், மாதவரத்தில் 780 பேர், பெருங்குடியில் 536 பேர், சோழிங்கநல்லூரில் 527 பேர், ஆலந்தூரில் 587 பேர், மணலியில் 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் உட்பட 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பேருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுதிணறல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர். அதன்படி சோதனையின் முடிவு நேற்று வந்த நிலையில் உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் உட்பட 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை செயலகத்தில் 142 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமை செயலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடை பெற்று வருகிறது.
மேலும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முககவசம், கையுறைகள் அணிந்து பாதுகாப்பாக பணிபுரிந்தாலும் கொரோனா பாதிப்புக்குள்ளாவது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஒரு சிலர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தலைமை செயலகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதால் ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews