புத்தகங்களை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமக்கக்கூடிய அபாயம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 27, 2020

Comments:0

புத்தகங்களை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமக்கக்கூடிய அபாயம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தாலும், மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், சில இடங்களில் டியூஷன் சென்டர்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. இதனால் மாணவர்களுக்கு கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு நல்ல பள்ளியில் பெற்றோர் போராடி அட்மிஷன் வாங்குகின்றனர். இருப்பினும், வகுப்பில் கற்பது மட்டுமே போதுமானதாக இல்லை. படிப்பில் அதிக மார்க் வாங்குவது மட்டுமின்றி, நுழைவுத் தேர்வு உட்பட பல்வேறு தனித் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்கள் டியூஷன் செல்கின்றனர். குடும்ப வருமானம் போதவில்லை என்றாலும், குழந்தைகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்பதே பெற்றோரின் குறிக்கோளாக உள்ளது. எனவேதான், டியூஷன் செலவைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. டியூஷன் தொடர்பாக தேசிய அளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இந்தியாவில் சராசரியாக 4ல் ஒரு குழந்தை டியூஷனுக்கு செல்வது தெரிய வந்துள்ளது. அதாவது, 26 சதவீதம் பேர் டியூஷனுக்கு செல்கின்றனர். சில மாநிலங்களில் இது 75 சதவீதமாக உள்ளது. அதாவது, 4ல் 3 பேர் டியூஷன் போகின்றனர். தொடக்கப்பள்ளி அளவில் ஆயிரம் மாணவர்களுக்கு 432 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 231 பேர், மாணவிகள் 201 பேர். இதுபோல் ஆயிரம் மாணவர்களுக்கு நடுநிலை பள்ளிகளில் 526 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 280, மாணவிகள் 246 பேர்., உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 725 பேர் டியூஷன் செல்கின்றனர். இவர்களில் மாணவர்கள் 378, மாணவிகள் 347 பேர் என தெரிய வந்துள்ளது. குடும்பத்தின் மொத்த வருமானத்தில் சுமார் 12 சதவீதம் டியூஷனுக்கு சென்றுவிடுகிறது என பெற்றோர் அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். பணக்காரர்கள் மட்டுமின்றி, நடுத்தர மற்றும் ஏழை குழந்தைகளும் கூட தனியார் டியூஷனுக்கு செல்கின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால், தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் வகையில் சில தனியார் டியூஷன் சென்டர்கள் இயங்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக புரசைவாக்கம், சூளை, அண்ணாநகர், தி.நகர், முகப்பேர், மயிலாப்பூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மறைமுகமாக டியூஷன் சென்டர்கள் இயங்க தொடங்கி விட்டன. சில டியூஷன் சென்டர்களில் ஆண்டுகட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த சூழ்நிலையில், டியூஷன் சென்டர்கள் இயக்க தொடங்குவது, பரவல் மிகவும் தீவிரம் ஆவதற்கு வழிவகுக்கும். அதோடு, சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கூட டியூஷன் சென்டர்களுக்கு நேரடியாக வர வாய்ப்புகள் உள்ளன. இதனால், புத்தகத்தை சுமக்கும் குழந்தைகள் கொரோனாவை சுமந்து பரப்பும் அபாயம் உள்ளது. பொதுத்தேர்வு உள்ள வகுப்புகளுக்கான மாணவர்கள் மட்டுமே டியூஷனுக்கு வந்து சென்றாலும் ஆபத்துதான். தமிழகத்தில் பள்ளிகளை ஆகஸ்டில் திறக்கவும், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் அரசு பரிசீலனை செய்து வருகிறது. கேரளாவில் ஆன்லைனில் அல்லாமல், நேரடியாக டியூஷன் சென்டர்களை நடத்தக்கூடாது என, அந்த மாநில முதல்வர் பினராய் விஜயன் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதுபோல், குழந்தைகள் நலனை மனதில் கொண்டு, கொரோனா தடை காலத்திலும் விதிமுறைகளை மீறி நேரடியாக செயல்படும் டியூஷன் சென்டர்களுக்கு கேரளாவை போல் தனியாக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews