ஊரடங்கால் முடங்கிய M.Phil/Ph.D ஆராய்ச்சிகள்; ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 02, 2020

Comments:0

ஊரடங்கால் முடங்கிய M.Phil/Ph.D ஆராய்ச்சிகள்; ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா வைரஸ் பரவலால் ஆராய்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளதால், எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் மாணவர்கள் அதிக அளவில் கூடும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு, செமஸ்டர் தேர்வுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் தயாரான வேளையில் கரோனா வைரஸ் தொற்றால் விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்துத் தேர்வுகளை நடத்த முடியாத நிலைக்குக் கல்வி நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆய்வாளர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் எம்.ஃபில்., பி.ஹெச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் ஆய்வாளர்கள், இக்காலகட்டத்தில் ஆய்வுப் பணியை முடித்து பல்கலைக்கழகங்களில் ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அப்பணியை முடிக்க முடியாத சூழலில் உள்ளனர். கோவை பாரதியாார் பல்கலைக்கழக நெறிமுறைகளின்படி, எம்.ஃபில்., முழுநேர ஆராய்ச்சிக் காலம் குறைந்தபட்சம் ஓராண்டு. பகுதிநேர ஆராய்ச்சிக் காலம் 2 ஆண்டுகள். பல்கலைக்கழகத்தில் கூடுதல் அவகாசமாக (Extention) மேலும் ஓராண்டு பெறலாம். இதற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை விண்ணப்பித்து ஆய்வுக் கால நீட்டிப்பு அனுமதி பெற வேண்டும்.
எம்.ஃபில் முடித்து முழுநேர பி.ஹெச்.டி. படிப்பில் சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக்காலம் 2 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக்காலம் 3 ஆண்டுகள். பல்கலைக்கழக அனுமதி பெற்று கூடுதலாக 2 ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். பகுதிநேர பி.ஹெச்.டி. படிப்பில் சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 3 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக்காலம் 5 ஆண்டுகள். பல்கலைக்கழகத்தில் கால நீட்டிப்பு அனுமதி பெற்று மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம். முதுநிலை பட்ட மேற்படிப்பை முடித்து, எம்.ஃபில் படிக்காமல் நேரடி பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு முழுநேர ஆய்வாளர்களாக சேருபவர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 3 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக் காலம் 5 ஆண்டுகள். கால நீட்டிப்பு அனுமதி பெற்று மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம். நேரடி பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்த பகுதி நேர ஆய்வாளர்களுக்குக் குறைந்தபட்ச ஆய்வுக் காலம் 4 ஆண்டுகள். அதிகபட்ச ஆய்வுக் காலம் 6 ஆண்டுகள். கால நீட்டிப்பு அனுமதியுடன் மேலும் இரு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொள்ளலாம்”.
ஆய்வுக் காலம் முடிந்து ஆய்வேடு சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள ஆய்வாளர்கள், கால நீட்டிப்பு கோரும் ஆய்வாளர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையால் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கிடையில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை மீண்டும் எப்போது திறப்பது? மாணவர்களுக்கு எப்போது செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது? எம்.ஃபில்., பிஹெச்.டி. ஆய்வாளர்களுக்கான இடையூறுகளைக் களைவது குறித்து ஹரியாணா மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) அமைத்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews