தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும் இம் மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்க தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும் தேர்வு அட்டவணை ஊரடங்கு முடிந்த பிறகு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நாடு முழுவதும் 3வது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒருநாள் விடுமுறை விடப்படும் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3 வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது . மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடபடும் என தேர்வு துறை அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews