தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 30, 2020

Comments:0

தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1564 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வெளியீடு. தமிழகத்தில் உள்ள அரசு / நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வித் திட்டம் செயல்படுத்தும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு அரசாணையின்படி 1564 பணியிடங்களுக்கு 01.01.2019 முதல் 31.12.2019 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து 1564 பணியிடங்களுக்கு 01.01.2020 முதல் மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் அரசைக் கோரியிருந்தார். அக்கருத்துரு மீது அரசின் கடிதத்தில் சில கூடுதல் விவரங்கள் கோரப்பட்டு , அப்பணியிடங்களின் சார்பான விவரங்களை சம்மந்தப்பட்ட அலுவலரிடம் தொகுத்து பெற்று வழங்க கால தாமதம் ஆகும். எனவே , 01.01.2020 முதல் 31.03.2020 வரை 3 மாதங்களுக்கு துறைத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் 1564 பணியிடங்களுக்கு தொடர்ந்து ஊதியம் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது
CLICK HERE TO DOWNLOAD PDF
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் மட்டும் வழங்கும்படி, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக கணினி ஆசிரியா்களுக்கு, ஏப்ரல் மாத சம்பளம் மட்டும் வழங்கும்படி, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா்.தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் 1,564 கணினி ஆசிரியா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றுகின்றனா். அவா்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, 2020 ஜனவரி முதல் டிசம்பா் வரை பணி நீட்டிப்பு வழங்க, பள்ளி கல்வி செயலருக்கு, பள்ளி கல்வி இயக்குநா் தரப்பில் கருத்துரு அனுப்பப்பட்டது. CLICK HERE TO DOWNLOAD PDF
இந்த கருத்துரு பரிசீலனையில் உள்ளதாகவும் தற்காலிக ஆசிரியா்களுக்கு பணி நீட்டிப்பு தேவையா என்பதற்கான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, பள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில், பணி நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் மட்டும் வழங்க, பள்ளி கல்வி செயலா் உத்தரவிட்டுள்ளாா். CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews