சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 18, 2020

Comments:0

சட்டக்கல்லூரியில் இணையம் மூலம் பாடம் கற்பிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேனி சட்டக்கல்லூரியில் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேனி அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு பாடத் திட்டத்திலும், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 3 ஆண்டு பாடப் பிரிவிலும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு பிரிவுகளிலும் தலா 80பேர் வீதம் 160 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களின் நலன் கருதி ஊரடங்கு முடியும் வகையில் இணையச் செயலி மூலம் பாடம் நடத்த சட்டக்கல்வி இயக்குநர் ந.ச.சந்தோஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி முதல்வர் ரா.அருண் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
தினமும் இணையச் செயலி மூலம் அனைத்து மாணவர்களுக்கும் காலை 10 முதல் 4 மணி வரை பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறையில் பாடம் கற்கும் மாணவர்களுக்கு இணையதளத்தில் வருகைப் பதிவேடும் எடுக்கப்பட்டு வருகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews