'NEET' தேர்வு விண்ணப்பம் பிழை திருத்த அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 17, 2020

Comments:0

'NEET' தேர்வு விண்ணப்பம் பிழை திருத்த அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்த, மே, 3 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், மார்ச், 24ல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே, 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே, 3ல் நடக்க இருந்த, நீட் நுழைவு தேர்வு, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர், தங்களின் விண்ணப்பங்களில் உள்ள பிழைகளை திருத்த, கூடுதல் அவகாசம் கேட்டு, தேசிய தேர்வு முகமைக்கு விண்ணப்பித்தனர்.
அதை ஏற்று, விண்ணப்ப பிழைகளை திருத்துதல் மற்றும் தேர்வு மையங்களை தேர்வு செய்வதற்கான அவகாசத்தை, மே, 3 வரை நீட்டித்து, தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை, மே, 3 வரை செலுத்தலாம் என்றும், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 'ஜே.இ.இ., தேர்வு ஜூலையில் நடத்தப்படும் என, வெளியான தகவல் தவறானது' என, தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் பொது தேர்வுக்கு பின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், இன்ஜி., படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இதற்கு, மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை வழியாக, ஜே.இ.இ., பிரதான தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆண்டு ஜனவரியில், ஜே.இ.இ., பிரதான தேர்வு முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்வு, ஏப்ரலில் நடப்பதாக இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை மற்றும் ஊரடங்கு காரணமாக, தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மே, 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஜே.இ.இ., தேர்வு மேலும் தள்ளி போயுள்ளது.இந்த தேர்வு, ஜூலையில் நடத்தும் வகையில், அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து, தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம்: ஜே.இ.இ., பிரதான தேர்வை நடத்தும் தேதி, இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜூலையில் நடத்தப்படுவதாக வெளியாகியுள்ள கால அட்டவணை போலியானது. இதுபோன்று வதந்தி பரப்புவோர் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.மாணவர்கள், ஜே.இ.இ., இணையதளத்தில், அவ்வப்போது வெளியிடப்படும் சரியான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், ஆன்லைனில் பிழைகளை திருத்துவதற்கான அவகாசத்தை, மே, 3 வரை, தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews