‘கணினி தேர்வில் சென்டம் வாங்கிடலாம்’ பிளஸ் 1 மாணவர்கள் உற்சாகம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 13, 2020

Comments:0

‘கணினி தேர்வில் சென்டம் வாங்கிடலாம்’ பிளஸ் 1 மாணவர்கள் உற்சாகம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
TN 11th Public Exam 2020: பிளஸ் 1 கணினி அறிவியல், உயிரி வேதியியல், கணினி பயன்பாடு, வீட்டு அறிவியல், புள்ளியியல் கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் இன்று நடைபெற்றது. இந்த தேர்வுகள் எப்படி இருந்தது, கேள்விகள் எளிமையாக இருந்தா என்பது பற்றி மாணவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
நடப்பு ஆண்டிற்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4 ஆம் தொடங்கியது. மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டது. இவைகளில் பொதுவாக ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்ததாக மாணவியர்கள் தெரிவித்திருந்தனர். கணித பாடத்தில் 5 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது கணினி அறிவியல், உயிரி வேதியியல், கணினி பயன்பாடு, வீட்டு அறிவியல், புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) நடைபெற்றது. பொதுவாக மற்ற பாடங்களைக் காட்டிலும் இந்த பாடங்கள் சற்று எளிமையாக இருக்கும்.
அந்த வகையில், கணினி அறிவியல் தேர்வில் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். அனைத்து கேள்விகளும் மிகஎளிதாக இருந்ததாகவும், சென்டம் வாங்கி விடலாம் என்றும் மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.உயிரி வேதியியல் பாடத்தில் கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக அந்த பிரிவு மாணவர்கள் தெரிவித்தனர். அடுத்ததாக மார்ச் 18 ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews