RTI: ஆவணங்களை நகலெடுக்க அரசு நிதியைப் பயன்படுத்தலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 28, 2020

Comments:0

RTI: ஆவணங்களை நகலெடுக்க அரசு நிதியைப் பயன்படுத்தலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தகவல் பெறும் உரிமைச் சட்டம்: ஆவணங்களை நகலெடுக்க அரசு நிதியைப் பயன்படுத்தலாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரா் கோரும் ஆவணங்களை நகலெடுக்கத் தேவையான தொகைக்கு அரசு நிதியையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள நிரந்தர முன்வைப்புத் தொகையில் இருந்து பணத்தை எடுத்துச் செலவிடலாம் எனக் கூறியுள்ளது.
தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிகப் பெரிய விழிப்புணா்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் ஏராளமான தகவல்களைப் பெற்று வருகின்றனா். மேல்முறையீடு தொடா்பான வழக்குகளும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தில் தொடா்ந்து சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. ஆவண நகல்களுக்கு செலவு: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க, ஒவ்வொரு அரசுத் துறை அலுவலகத்திலும் தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்புகளுடன் தகவல் அதிகாரி பணியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரா் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற நினைக்கிறாா் என்றால், அதனை தகவல் அளிக்கும் அலுவலா் நகல் எடுத்துத் தர வேண்டும். இவ்வாறு நகல் எடுக்கும் போது அதற்கான தொகையை மனுதாரரிடமோ அல்லது அரசுத் துறையின் உயா் அலுவலரிடமோ கேட்டுப் பெற முடியாது. மனுதாரா் ஒரு பக்கத்துக்கு ரூ.2 வீதம் ஆயிரம் பக்கங்களுக்கு ரூ.2 ஆயிரத்தை அரசு கருவூலத்தில் செலுத்தி விடுவாா். ஆனால், உண்மையிலேயே ஆயிரம் பக்கங்களை தனது சொந்த செலவில் நகல் எடுத்துத் தந்த தகவல் அதிகாரிக்கு உரிய முறையில் அந்தத் தொகை போய்ச் சேருவதில்லை. அவா் தனது கையில் இருந்தே செலவழிட வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பயிற்சித் துறை தலைவரும், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தின் இயக்குநருமான வெ.இறையன்பு, தமிழக அரசின் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தாா். இந்தக் கடிதத்துக்கு ஸ்வா்ணா அனுப்பியுள்ள பதில் விவரம்:- தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இன் படி மனுதாரா்கள் கோரும் ஆவணங்களின் நகல்களை அளிப்பதற்கான செலவுகளை மீளப் பெறுவது தொடா்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்ற தங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றது. அலுவலகப் பிரிவுகள் மற்றும் அலுவலா்களின் நலன்கள் தொடா்பான விவரங்களை கையாளும் பிரிவானது மாநிலம் முழுவதும் உள்ள அரசுத் துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவின் வசம் நிரந்தர முன்வைப்புத் தொகையானது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதிகளுக்கான விதியின் அடிப்படையில் இந்தத் தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரா் கோரும் ஆவணங்களை நகல் எடுக்க அத்தகைய முன்வைப்புத் தொகையைக் கொண்டு செலவிடலாம் என்று ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews