அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுங்கள்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 24, 2020

Comments:0

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுங்கள்: அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஓய்வுபெறும் நாளில், தற்காலிக பணிநீக்கம் செய்த அரசு ஊழியர் மு.சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பில் இருந்தவரான மு.சுப்பிரமணியன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக கடந்த 31.5.2019 அன்று ஓய்வு பெற இருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதாக கூறி, 31.5.2019 பணி ஓய்வுபெறும் நாள் அன்று தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் 32 ஆண்டுகள் அரசு பணியை நேர்மையோடு நிறைவேற்றி உள்ளார். எனவே, மு.சுப்பிரமணியன் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளை இறுதிப்படுத்தி, அவரது தற்காலிக பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும். அவருக்கு ஓய்வுகால பயன்கள் கிடைத்திட ஆணைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான குற்ற குறிப்பாணை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், தலைமை செயலகத்தில், அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து பேசினர். அதன்பின், சங்கத்தின் பொதுச் செயலர் செல்வம் கூறியதாவது:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நடந்து ஓராண்டு முடிந்துள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட, 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது குற்ற குறிப்பாணை ஏற்படுத்தப்பட்டு உள்ளது; 1,500 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று, முதல்வர் பழனிசாமி கூறியதால், நல்லெண்ண அடிப்படையில், பணிக்கு திரும்பினோம். அதன்பிறகும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான குற்ற குறிப்பாணை, பணியிட மாற்ற நடவடிக்கை ரத்து செய்யப்படவில்லை.இதுதொடர்பாக, இன்று அமைச்சர் ஜெயகுமாரை சந்தித்து பேசினோம். எங்கள் கோரிக்கையை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை, முதல்வர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews