முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 18, 2020

Comments:0

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
முதுநிலை மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தைத் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் செயல்படுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில்.. இந்தியா முழுவதும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களை 3 மாதங்களுக்கு பணியாற்றச் செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்களை 30% அதிகரிக்க இந்திய மருத்துவக்குழு முடிவு செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கத் திட்டம் தான் என்றாலும் கூட, ஊரகப் பகுதிகளில் மருத்துவ சேவையைப் பரவலாக்க, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்குவது தான் சிறந்த தீர்வாகும்.
மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் படிப்புக் காலத்தில் 3 மாதங்களுக்கு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்படவுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில அரசுகள், முதுநிலை மருத்துவம் பயிலும் மாணவர்கள் மாவட்ட மருத்துவமனைகளுக்கு பணியாற்றச் செல்லும் போது, மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சேவை பாதிக்கப்படும் என கவலை தெரிவித்தன. அதைத் தொடர்ந்து இந்த சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இடங்களை 30% உயர்த்துவதற்கு மருத்துவக்குழு தீர்மானித்து உள்ளது. மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது பயனுள்ளது என்பதால், இத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த இடங்களில் 50% இடங்கள் கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஊரக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் எந்தவித கட்டாயமும் இன்றி எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி படித்த மருத்துவர்கள் ஊரகப் பகுதிகளில் சேவையாற்றி வந்தனர். அதனால், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் எந்த தடையுமின்றி கிடைத்து வந்தன. மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் முதுநிலை மருத்துவர்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் சிறப்பானதாகும். ஆனால், அந்த நோக்கத்தை எட்டுவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிப்பது மட்டும் போதாது. மாறாக, ஊரகப் பகுதிகளில் முதுநிலை மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் தீர்வாக அமையும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியும். அதைச் செய்யவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு கூட மருத்துவர்கள் முன்வர மாட்டார்கள்.
எனவே, கிராமப்புறங்களுக்குத் தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தைத் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் செயல்படுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, அனைத்து நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews