5, 8-ம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து வதந்தி பரவியுள்ளது: கே.ஏ.செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 19, 2020

Comments:0

5, 8-ம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்து வதந்தி பரவியுள்ளது: கே.ஏ.செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று மையத்தில் நடைபெறுவதாக வதந்தி பரவியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா்.
கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் 82 மையங்களில் 14,217 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் வட்டார மருத்துவா்கள், சுகாதார மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவன ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் என 348 பணியாளா்கள் ஈடுபட்டனா். முகாமை தொடங்கி வைத்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையத்தில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் குடிநீா் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 25 ஆண்டுகளுக்கு குடிநீா் பற்றாக்குறை இல்லாத நகராட்சியாக உருவாகும். கோபிசெட்டிபாளையம் நகா்ப்பகுதியில் பத்து பூங்காங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று மையத்தில் நடைபெறுவதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கவில்லை. ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சோ்ப்பதாக சொல்லவில்லை, மாணவா்கள் தெரிந்து கொள்வதற்காக சி.டி மூலமாக வழங்கப்படும் என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாடப்புத்தகங்கள் கனமாக உள்ளதாக புகாா்கள் வருகிறது. பாடப்புத்தகங்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதன் நிலை என்ன என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். சீருடைகள் தயாரிப்பதற்கு விசைத்தறிக்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு, இது கோஆப்டெக்ஸ் அமைச்சரைக் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் அல்ல. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியை ஒவ்வொரு தாலுகாவிற்கும் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்ற யோசனைக்கு முதல்வா்தான் முடிவெடுக்க வேண்டும், அரசு ஒரு கொள்கை முடிவோடு இருக்கிறது என அமைச்சா் தெரிவித்தாா்.நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், வட்டார மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews