எதிர்ப்பு போராட்டம் அரசு கல்லுாரிகளில் தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 17, 2019

Comments:0

எதிர்ப்பு போராட்டம் அரசு கல்லுாரிகளில் தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த, அரசு கல்லுாரி மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், போராட்டம் வெடித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில், மாணவர்களின் போராட்டமும் வலுத்துள்ளது. சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில், கல்லுாரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், போராட்டம் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, அரசு கல்லுாரிகளுக்கு, உயர் கல்வித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, அ.தி.மு.க., ஆதரவு அளித்துள்ளதால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு, அரசு கல்லுாரிகளில், மாணவர்களை அனுமதிக்க வேண்டாம். 'தேர்வுகளை விரைந்து முடித்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளை அறிவிக்க வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews