'தனியார் மருத்துவ கல்லுாரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

'தனியார் மருத்துவ கல்லுாரி கட்டணத்தை மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'தனியார் மருத்துவ கல்லுாரிகளின் கட்டணத்தை, மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணங்களை, இந்திய மருத்துவ குழுவின் ஆட்சிக் குழு நிர்ணயித்து உள்ளது; இது, மிகவும் அதிகமாகும். இந்திய மருத்துவ குழுவின் ஆட்சிக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின்படி, தனியார் கல்லுாரிகளில் உள்ள, 50 சதவீதம் மருத்துவ படிப்பு இடங்களுக்கு, ஆண்டு கட்டணமாக, எட்டு லட்சம் ரூபாய் மட்டுமே, வசூலிக்கப்பட வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கு, ஆண்டு கட்டணமாக, 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கலாம். மீதமுள்ள, 50 சதவீதம் இடங்களுக்கு, கல்லுாரி நிர்வாகம், விருப்பம் போல கட்டணம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என, சலுகை காட்டப்பட்டுள்ளது.அதிகாரம்தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, தனியார் மருத்துவ கல்லுாரி கட்டணங்களை, மாநில அரசால் அமைக்கப்பட்ட, நீதிபதிகள் குழு நிர்ணயித்து வந்தது.
தமிழகத்தில், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், 65 சதவீத இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கும், 35 சதவீத இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அதிகபட்சமாக, நான்கு லட்சம் ரூபாயும், நிர்வாக இடங்களுக்கு, 12 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஒப்பீட்டளவில், இது, மிகக் குறைவான கட்டணம். இந்திய மருத்துவ குழு, தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, இரு மடங்கு கட்டணத்தை நிர்ண யித்துள்ளது. இதனால், தமிழக மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.எனவே, தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம், மீண்டும் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடுஅதேபோல, நிகர்நிலை பல்கலைகளில், 65 சதவீத இடங்கள், அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுவதுடன், அனைத்து இடங்களும், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பின்பற்றி, மாநில அரசின் வழியே, ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட வேண்டும்.நிகர்நிலை பல்கலைகளிலும், கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், மாநில அரசுகளுக்கே வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை ஆணையம் அனுப்பியிருக்கும் பரிந்துரைக்கு ஒரு வேளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில்வதற்கான ஆண்டுக் கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்படும். அதன்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயில ஆண்டுக் கட்டணம் ரூ.8 லட்சத்துக்குள்ளும், மருத்துவ முதுகலைப் பயில ஆண்டுக்கு தற்போது மாணவர்கள் செலுத்தும் தொகையில் 90% அளவுக்குக் குறைவாக செலுத்தும் நிலையும் ஏற்படலாம். இந்த கட்டண முறை, ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரியிலும் மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கான 50% மாணவர் சேர்க்கை இடங்களுக்கு பொருந்தும். தற்சமயம், எம்பிபிஎஸ் பயில தனியார் கல்லூரிகளில் ரூ.30 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரையும், எம்.எஸ். மற்றும் எம்.டி. பயில ரூ.1 முதல் 3 கோடிகள் வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினர், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தில்லி-எய்ம்ஸ், ராணுவப் படை மருத்துவக் கல்லூரி - புணே, ஆகியவற்றில் நிர்ணயிக்கப்படும் கல்விக் கட்டணத்தை ஆராய்ந்த பிறகே இந்த பரிந்துரையை செய்துள்ளனர். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாணவருக்கு கல்வி கற்பிக்க சராசரியாக ரூ.10 லட்சம்தான் செலவாகிறது. ராணுவ மருத்துவக் கல்லூரியில் ரூ.6 லட்சம் செலவாகிறது. அதே சமயம், ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர், முழு எம்பிபிஎஸ் படிப்புக்குமே ரூ.5 லட்சத்துக்குள்தான் கட்டணமாக செலுத்துகிறார்கள். இவர்களுக்கான கல்விக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகப்பெரிய தொகையை மானியமாக செலுத்துகின்றன. மருத்துவக் கல்லூரிகளின் கல்விச் செலவை முழுவதும் ஆராய்ந்த பிறகு, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் செலவாகவில்லை என்பதை கண்டறிந்தோம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews