கல்வித்துறை சார்பில் விருது வழங்கப்பட்ட ஆசிரியர் கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 09, 2019

கல்வித்துறை சார்பில் விருது வழங்கப்பட்ட ஆசிரியர் கைது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மயிலாடுதுறை அருகே, 9 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார். நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில், ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ராதாநல்லுார் கேசிகன் பாலம் பகுதியைச் சேர்ந்த, பிரேம்குமார், 28, என்பவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், 4ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து, பிரேம்குமாரை, நேற்று தாக்கினர். மேலும், பள்ளிக்குப் பூட்டுப் போட்டு பூட்டினர். தொடர்ந்து, பிரேம்குமாரை பிடித்து, மணல்மேடு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து, சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், பிரேம்குமாரை கைது செய்தனர். ஆசிரியர் பிரேம்குமாருக்கு, இவ்வாண்டு, தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், 'புதுமைப்படைக்கும் ஆசிரியர்' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews