மாற்று பள்ளி இடத்திற்கு மாணவிகளை அனுப்ப எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 05, 2019

Comments:0

மாற்று பள்ளி இடத்திற்கு மாணவிகளை அனுப்ப எதிர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தில்லையாடி வள்ளியம்மை அரசு பள்ளியில் இடவசதியில்லாததால், வேறு பள்ளிக்கு, தற்காலிகமாக வகுப்புகளை இடம் மாற்றம் செய்யும் கல்வித்துறை முடிவுக்கு, பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளியம்மை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் போதிய இடவசதியின்றி, 6, 7, 8 வகுப்புகள், பள்ளி எதிரில் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தற்காலிக ெஷட்டில், 7 ஆண்டுகளாக இயங்கி வந்தது. தகர ெஷட் அமைக்கப்பட்ட இக்கட்டடம், மழையால் மிகவும் மோசமான நிலைக்கு சென்று விரிசல் விழுந்தது. இதை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை, இனி, இந்த கட்டடத்தில் பாடம் நடத்த தகுதியில்லை என கூறிவிட்டனர்.தற்காலிக இடமும் மூடப்பட்டதால், கடந்த மாதம் 29ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவியர் படிக்க இடமின்றி தவித்தனர்.
மழையும் பெய்ததால், அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தஞ்சம் புகுந்தனர்.மாணவியரின் அவதி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, தில்லையாடி வள்ளியம்மை பள்ளி இரு ஷிப்டுகளாக, மாணவியருக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திரா நகர்அரசு தொடக்கப் பள்ளி கட்டடத்தில் காலியாக உள்ள வகுப்பறை கட்டடத்திற்கு தில்லையாடி வள்ளியம்மை பள்ளி 6,7,8 வகுப்புகளை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி, நாளை (6ம் தேதி) முதல் மாற்றுப்பள்ளி இடத்தில் வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்தது.
இது தொடர்பாக, பள்ளி வளாகத்தில் மாணவியரின் பெற்றோரை அழைத்து, தலைமை ஆசிரியர் அருணாசலம் தகவலை தெரிவித்தார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் பிள்ளைகளை மாற்று இடத்திற்கு அனுப்பமாட்டோம். எதிரிலேயே உள்ள அரசு பள்ளி கட்டத்திற்கு வகுப்புகளை மாற்றுங்கள் என ஆவேசமாக கூச்சலிட்டனர். மேலும், கல்வித்துறையின் முடிவை கண்டித்து, வழுதாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, போலீசார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எதிரில் உள்ள கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் இடம் பெற, கல்வித்துறை அதிகாரிகளிடம் பேசி முடிவெடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews