தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்: 33 ஆக உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 26, 2019

Comments:0

தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்: 33 ஆக உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
3 மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தற்போது 24 அரசு மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 3,250 எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழகத்தில் உள்ளன.இந்த நிலையில் மத்திய அரசின் நிதிஉதவியுடன் 6 மருத்துவகல்லூரிகள் அமைக்க ஒப்புதல் கிடைத்தது. நாமக்கல், திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் அமைய உள்ளன. இந்த நிலையில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்தது. கடலோர மற்றும் பின் தங்கிய மாவட்டமான திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி ஆகியவற்றை தமிழக அரசு தேர்வு செய்தது. இதையடுத்து மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசிடம் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் கேட்டு தமிழக அரசு விண்ணப்பித்தது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 3 கல்லூரிகளுக்கு ஒப்புதல் தந்ததால் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்கிறது. 3 மருத்துவ கல்லூரிகளும் தலா ரூ. 325 கோடியில் அமைக்கப்பட உள்ளது. 3 கல்லூரிகளுக்கும் தலா 150 இடங்கள் கிடைக்கும் என்பதால் மருத்துவ இடங்கள் 4,600 ஆக உயரும். புதிய மாவட்டங்களை தவிர பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. *நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிக மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.வேளாங்கண்ணியில் கிறிஸ்தவ ஆலயம், நாகூர் தர்கா போன்ற சுற்றுலா மையங்கள் இருப்பதால் மக்களின் மருத்துவ தேவை அதிகம் உள்ளது. *கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் இருப்பதால் இங்கு மருத்துவ கல்லூரிகள் அவசியமான ஒன்று. * திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை 50 கி.மீ. தூரமாகும் அங்கிருந்து நோயாளிகள் சென்னை வருவதற்கு 3 மணி நேரம் ஆகிறது. அதனால் அங்கு புதிய மருத்துவ கல்லூரி தேவையான ஒன்று.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews