மருத்துவ கல்லூரி மாணவர் அனைவரின் கைரேகை உள்ளிட்ட விவரங்களை தேசிய முகமையிடம் அளிக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 26, 2019

Comments:0

மருத்துவ கல்லூரி மாணவர் அனைவரின் கைரேகை உள்ளிட்ட விவரங்களை தேசிய முகமையிடம் அளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மருத்துவ கல்லூரி மாணவர் அனைவரின் கைரேகை உள்ளிட்ட விவரங்களை தேசிய முகமையிடம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை கழக மருத்துவ மாணவர்கள் அனைவரும் தகவல்களை அளிக்க உத்தரவிட்டுள்ளது. விவரங்களை அக் 30-ம் தேதிக்குள் தேசிய முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் போது மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என தேசிய தேர்வு முகமை, நாளை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிகர்நிலை பல்கலை கழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி மற்றும் தடயவியல்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே வழக்கின் விசாரணையின் போது, தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா ? அரசு ஆசிரியர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் எடுக்கிறார்களா? தனியார் மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews