நாட்டின் முதல் பார்வையற்ற பெண் IAS அதிகாரி பிராஞ்ஜல் பாட்டீல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

நாட்டின் முதல் பார்வையற்ற பெண் IAS அதிகாரி பிராஞ்ஜல் பாட்டீல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாட்டின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிராஞ்ஜல் பாட்டீல் (30) , கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக திங்கள்கிழமை பதவியேற்றார். மேலும், "எப்போதும் நாம் முயற்சி செய்வதை கைவிடக்கூடாது; நாம் தோற்றுபோக அனுமதிக்கக் கூடாது' என்று அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், உல்லாஸ்நகரைச் சேர்ந்த பிராஞ்ஜல் பாட்டீல், தனது 6-ஆவது வயதில் பார்வையை இழந்தார். அதையடுத்து பெற்றோர், ஆசிரியர்களின் உதவியுடன், பள்ளி, பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்த அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வரும் இந்திய குடிமைப் பணிகள் தேர்வை எழுதினார். அந்த ஆண்டு தரவரிசையில் 773-ஆவது இடத்தை பிடித்ததையடுத்து தனது வெற்றி வாய்ப்பை அவர் இழந்தார்.
அதைத் தொடர்ந்து தனது முயற்சியைக் கைவிடாத அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகள் தேர்வை மீண்டும் எழுதினார். இதில், தரவரிசையில் 124-ஆவது இடத்தைப் பிடித்து அவர் வெற்றி பெற்றார். அதையடுத்து ஐஏஎஸ் பதவியைத் தேர்ந்தெடுத்த அவர், பயிற்சிக் காலத்தில் கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராக பணிபுரிந்தார். அவரது பயிற்சிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, திருவனந்தபுரத்தின் சார் ஆட்சியராக திங்கள்கிழமை பதவியேற்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நாம் எப்போதும் தோற்கடிக்கப்படக் கூடாது; நாம் எப்போதும் முயற்சி செய்வதைக் கைவிடக்கூடாது. ஏனெனில், நமது ஒட்டுமொத்த முயற்சியின் பயனால், ஒருநாள் நம் இலக்கையும், நாம் விரும்பியதையும் நிச்சயம் அடைவோம்' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews