UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று அக்.15 கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 15, 2019

Comments:0

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று அக்.15 கடைசி நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேருவதற்கும், ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு இரண்டாவதாக நடத்தப்படும் நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 2, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட இருப்பதாக தேசிய தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி) அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செப்டம்பர் 9ம் தேதி தொடங்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நெட் தேர்வு விண்ணப்ப பதிவு அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கு அக்டோபர் 16ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரெடிட், டெபிட்கார்டு மற்றும் நெட் பேங்கிங் போன்றவற்றின் வாயிலாக கட்டணம் செலுத்த இயலும். விண்ணப்பத்தில் ஆன்லைன் வாயிலாக திருத்தம் செய்ய வழங்கப்பட்டிருந்த வாய்ப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அக்டோபர் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை https://ugcnet.nta.nic.in இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
UGC NET 2019: டிசம்பர் மாதம் நடைபெறும் NET Exam 2019 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.9) கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், தற்போது நெட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் அக்டோபர் 15 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணியில் சேருவதற்கும், ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் (NET Exam) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு இரண்டாவதாக நடத்தப்படும் நெட் தேர்வு வரும் டிசம்பர் மாதம் 2, 6 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 9ம் தேதி விண்ணப்பங்கள் பதிவு தொடங்கப்பட்டது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று அக்டோபர் 9ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முடிவடைதாக இருந்த நெட் தேர்வு விண்ணப்பதிவு, அக்டோபர் 15ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் அக்டோபர் 15ம் தேதி வரையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டதற்கான தகவல் https://ugcnet.nta.nic.in இணையளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews