பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 05, 2019

Comments:0

பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைவருக்கும் கல்வி என்ற முறையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இந்த ஆண்டே நடைபெறும். 3 ஆண்டுகள் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு நடைபெறும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள். ஆசிரியர்கள் கற்றல் திறன் மாணவர்கள் மேம்பட வாய்ப்பாக அமையும். ஏழை எளிய மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டி தேர்வை சந்திக்கும் வாய்ப்பாக இது அமையும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி ஒன்றில் வளர்ந்து வரும் மாநிலங்களில் கல்வித் துறையில் முதல் மாநிலமாக கேரளாவும், இரண்டாவதாக தமிழகமும் உள்ளன. இந்த ஆண்டும் இதுபோன்ற புள்ளிவிவரங்களை கணக்கிட்டால் தமிழகம்தான் முதலிடம் பிடிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் அந்த அளவுக்கு பள்ளிக்கல்விக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். பாடத்திட்டங்களிலும் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். எனவே தமிழகம் முதலிடம் பிடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை. மேலும், , பள்ளி செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர் நியமனம், தலைமை ஆசிரியருக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தல் ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது. எனவேதான் 2018-19-ம் ஆண்டு, 2019-20-ம் ஆண்டுகளில் பள்ளிக்கல்வித் தரக்குறியீட்டு அட்டவணையை வெளியிட்டால் அதில் தமிழகம்தான் முதலிடம் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளிக்கும் ஊக்கம் அதிகமாக உள்ளது. எனவே தமிழகத்தின் பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை. என்று தெரிவித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews