கோவை மாணவர்கள் கல்லூரியில் சேர அனுமதி: முறைகேடு டாக்டர் மீது நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 28, 2019

Comments:0

கோவை மாணவர்கள் கல்லூரியில் சேர அனுமதி: முறைகேடு டாக்டர் மீது நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கோவை மருத்துவக் கல்லுாரி, முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவரிடம் விசாரணை நடத்திய, மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள், அவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்பதால், மீண்டும் கல்லுாரியில் சேர அனுமதி அளித்துள்ளனர்.'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த, சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தார். இது தொடர்பாக, மாணவர், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைஇதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள, அரசுமற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களின், ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.இதில், கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டில் சேர்ந்த, ஜோதிகா, சிவராமச்சந்திரன் ஆகிய இருவரின் புகைப்படம் வேறுபட்டிருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக, சென்னையில் உள்ள, மருத்துவக் கல்வி இயக்ககத்தில், நேற்று விசாரணை நடந்தது. மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராகினர். ஒத்துழைப்புமாணவர்கள் கடைசி நேரத்தில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததால், இளம் வயதில் எடுத்த புகைப்படத்தை, விண்ணப்பத்தில் இணைத்தது தெரிய வந்தது.
மேலும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதால், மாணவர்கள் மோசடியில் ஈடுபடவில்லை என, மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவுக்கு வந்தது.இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர், நாராயண பாபு கூறியதாவது:கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் இருவரிடம் விசாரணை நடந்தது. சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருந்தன. இருவரும், சம்பந்தப்பட்ட கல்லுாரியில், உடனடியாக சேர்ந்து படிக்கலாம். அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், முதலாம் ஆண்டு மாணவர்களின், சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. வேறு எந்த புகாரும் வரவில்லை.போலீஸ் அறிக்கை கிடைத்ததும், ஆள் மாறாட்ட விவகாரத்தில் கைதாகியுள்ள, டாக்டர் வெங்கடேசன் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தாண்டு முதல், 'பயோ மெட்ரிக்' முறையில், கைரேகை பதிவுடன் கவுன்சிலிங் நடைபெறும். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, 2017ல் இருந்து, மாணவர்களின் ஆவணங்களை சரிபார்த்தால், மருத்துவக் கல்வி இயக்ககம் ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews