15 நாளில், 'ரிசல்ட்' 'டாஸ்மாக்' அசத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 04, 2019

15 நாளில், 'ரிசல்ட்' 'டாஸ்மாக்' அசத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'டாஸ்மாக்' நிறுவனம், 500 இளநிலை உதவியாளர் பதவிக்கான, எழுத்து தேர்வு முடிவுகளை, 15 நாட்களில் வெளியிட்டு உள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,200 சில்லரை கடைகள் வாயிலாக, மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில், விற்பனையாளர், மேற்பார்வையாளர் என, 26 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அவர்களில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேரை, அலுவலகங்களில், இளநிலை உதவியாளர்களாக நியமிக்க, டாஸ்மாக் முடிவு செய்தது. இதற்கான எழுத்து தேர்வு, ஆகஸ்ட், 18ல் நடத்தப்பட்டது. இதை, 8,401 பேர் எழுதினர். தேர்வு நடந்த, 15 நாட்களில், அதற்கான முடிவுகளை, டாஸ்மாக் நிறுவனம் நேற்றிரவு வெளியிட்டது. இந்த விபரம், டாஸ்மாக் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையான முறையிலும் நடத்தப்பட்டது. இதனால், தேர்வு முடிவுகள் விரைவாக வெளியிப் பட்டன. அதிக மதிப்பெண் எடுத்தவர்களிடம், வரும், 14ம் தேதி வரை, சான்றுகள் சரிபார்க்கப் பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews