டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வில் குளறுபடி : தேர்வர்கள் குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 20, 2019

டாஸ்மாக் இளநிலை உதவியாளர் தேர்வில் குளறுபடி : தேர்வர்கள் குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணிக்கு நடந்த தேர்வில் கேள்வி மற்றும் விடைத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தேர்வு எழுத 8 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் தேர்வு எதிர்கொள்வது குறித்த பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 9 மையங்களில் தேர்வு நடந்தது. 500 காலிப்பணியிடங்களுக்கு 8 ஆயிரத்து 401 பேர் எழுதினர். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்வி கேட்கப்பட்டது. தேர்வில் கேள்வி மற்றும் விடைத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் மத்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் சீரியல் எண்கள் வழங்கப்படவில்லை. இதேபோன்று விடைத்தாளில் (ஓ.எம்.ஆர் சீட்டில்) பாதுகாப்பு அம்சமான பார் கோடு, சீரியல் எண்களும் இல்லை. கேள்வி தாள்களில் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த போது வேறு மாதிரி இருந்தது. இதனால், தேர்வு எழுதுபவர்கள் குழப்பம் அடைந்தனர். டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி மற்றும் வங்கி தேர்வுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. இதனால், தவறு நடைபெறுமோ என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றனர். இவ்வாறு கூறினர். தேர்வர்களின் குற்றச்சாட்டு குறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘இத்தேர்வில் எந்த வித விதிமுறைகளும் மீறப்படவில்லை. பாதுகாப்பான முறையிலேயே தேர்வு நடைபெற்றுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி போன்ற போட்டி தேர்வுகளில் என்ன நடைமுறையின்படி கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள்கள் வழங்கப்படுமோ அதன்படியே இத்தேர்விலும் வழங்கப்பட்டுள்ளது. தவறு நடைபெற 1 சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews